Saturday 19 August 2017

நாம் தீய சக்தியை நாடிப்பு போகின்றோமா அல்லது நல்ல சக்தியை நடிப்போகின்றோமா ?

மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரா கணேஷ் வெங்கட் ராமன்.  உங்களைக் குற்றம் சாட்டுவது எனது நோக்கமில்லை.  ஒரு உதாரணத்துக்கு தான் உங்களை தேர்வு செய்கின்றேன்.  நீங்கள் நல்லவர்தான், பண்பாடு தெரிந்தவர் தான்.

பிக் பாஸ் வீட்டில் ஓவியாவும் காயத்திரியும் ஒன்றுக்கொன்று எதிரான  சக்திகள்.  ஓவியா மென் குணம் கொண்டவள்.  காயத்திரி வன் குணம் கொண்டவள்.   ஓவியா நற்குணங்களின் உறைவிடம்.  காயத்திரி துர்குணங்களின் உறைவிடம்.  ஓவியா உலகமே ஆராதிக்கும் ஒருத்தி.  காயத்திரி உலகமே வெறுக்கும் ஒருத்தி. இது வெளியே உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கிற அளவுக்கு உள்ளே இருக்கிறவர்களுக்கு விளங்கவில்லை.  போகட்டும் அந்த நிகழ்ச்சியின் அமைப்பு அப்படி.  காயத்திரியுடன் யூலி,  நமீதா, ரைசா போன்றோர் கூட்டு சேருகின்றார்கள்.  ஆச்சரியம் இல்லை.  அவர்கள் குணங்களும் காயத்திரியின் குணங்களும் ஒத்துப் போக கூடியவை தான்.

எனக்கு மிகவும் ஆச்சரியம் தருவது கணேஷ் வெங்கட்ராமன் போக்குததான்.  மிகவும் நல்ல அப்பாவியான மனிதர்.  சண்டை சச்சரவுக்குப் போகாதவர்.  நல்ல பண்புகளைக் கொண்டவர். அது எப்படி காயத்திரியின் துர்க்குணங்களை துளி கூட இனம் காணாமல் இருக்கிறார்.  யூலி செய்வது எல்லாமே தவறு என்று தெரிந்தாலும் அதை பெரிது பண்ணாமல் நொடிப்பொழுதில் அவளை மன்னித்து எதுவும் நடக்காதது போல ஏற்றுக்கொள்ளுகிறார்.

ஓவியா போன்றதொரு positve energy ஐ துளியும் இனம் காணாமல், புரிந்து கொள்ளாமல்,  அவளின் கடைசி நேர அவல நிலைக்கு சற்றும் அனுதாபமோ இரக்கமோ ஏற்படாமல் இருக்கிறார்.  விடை காண முடியாமல் நான் அவதிப்படுகின்ற கேள்விகள் இவை.  ஆரம்பத்தில் சொன்னதைத் தான் திரும்பவும் சொல்கிறேன்.  கணேஷ் வெங்கட்ராமனை ஒரு உதாரணமாகத் தான் எடுத்தேன்.  (மன்னித்துவிடு சகோதரா )  பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே எம்மில் எத்தனைபேர் இப்படி நல்ல சக்திகளை இனம்கண்டு அவற்றுடன் சேராமல் தீய சக்திகளால் கவரப்பட்டு கட்டுண்டு கிடக்கிறோம்.  இப்படியான போக்கு எம்மில் பல பின்னடைவுகளை ஏற்படுத்தலாம். கணேஷ் வெங்கட் ராமன் இடத்தில் எம்மை வைத்து ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment