அழகிழந்தேன், பொலிவிழந்தேன்,
பலமிழந்தேன் , பணமிழந்தேன்
உற்றோரின் மற்றோரின் மதிப்பிழந்தேன்
என நீ நினைத்தயானால்
ஏமாற்றம் உனக்குத்தான் .
நான் மாறிப்போனேன் முதிர்ச்சியுற்றேன்
நின்று நிதானிக்கின்றேன்
உண்மை புரிந்துகொண்டேன் .
பழைய பரபரப்பு இல்லை
பழைய ஓட்டம் இல்லை
என்னைச்சுற்றி சுயநலமிக்க
போலிகளும் இல்லை
எனக்குள் கூடு காட்டும் குருவிகளும்
ஒளிந்து விளையாடும் சிறு முயலும்
எனதினிய நண்பர்களாம்.
பேரோடும் புகழோடும்
பணத்தோடும் ஆணவத்தோடும்
பரபரத்தோடும் எனது பழைய நண்பர்களே
நான் அழிந்தேன் என நீங்கள் ஆனந்தம் கொண்டால்
அது உங்கள் அறியாமையே.
போலிகளும் சுயநலக்காரரும்
அற்ற இனிய உலகில்
எனது புது வாழ்க்கையை
இனிதே வாழ்கின்றேன்.
இதுவெல்லாம் உங்களுக்குப்
புரியாது .
இது ஒரு அழகான வாழ்க்கை