Wednesday 8 May 2013

காதலுக்கு அழகான விளக்கம் தந்த நடிகை ஸ்ரீதேவி


காதலுக்கு ஆயிரம் ஆயிரம் விளக்கங்கள் சொல்லப்பட்டு விட்டன.  அவர் அவர் கோணத்தில் அவர் அவர் விளக்கங்கள் நியாயமாகப் படலாம். என்னைப் பொறுத்தவரையில் காதலில் தோற்றவர்கள் சொல்லும் விளக்கங்களை விட, காதலில் வென்றவர்கள் சொல்லும் விளக்கங்கள் ஆரோக்கியமானவை என நான் நம்புகின்றேன்.  அதிலும் காதலுடனே பல காலம் வாழ்ந்தவர்கள் சொல்லும் விளக்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.  அந்த வகையில் நடிகை சிறீதேவி சொன்ன விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.

அதாவது, காதல் மூன்று அம்சங்களைஅடக்கியதாக இருக்க வேண்டும்.
1. நம்பிக்கை- ஒருவரை ஒருவர் சந்தேகங்கள் இன்றி நம்புதல்
2. பாதுகாப்பு-  ஒருவருக்கு வேண்டிய பாதுகாப்பை மர்றவர் வழங்குதல்
3. மதிப்பு-          ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல்.

இதில் மூன்றாவது அம்சம் தான் என்னை மிகவும் கவர்ந்தது.  புலம் பெயர் வாழ்வில் நான் நன்றாகவே பார்த்திருக்கிறேன்.  காதல் கடிமணம் புரிந்த வீடுகளில் வாக்குவாதங்களின் போது ஒருவரை ஒருவர் மதிக்காமல் வார்த்தையாடுதல் மிகவும் சகஜமான ஒன்றாகி விட்டது.  அதிலும் விசேடமாக கணவன்மார்கள் தம் மனைவிமாரை திட்டும் விதங்கள் காது கொடுத்துக் கேட்க முடியாதவை.

எம் காதலர்களுக்கு தேவையான மதிப்பளிக்கவும், நம்பிக்கை வைக்கவும், தேவையான பாதுகாப்புக் கொடுக்கவும் பழகிக் கொள்வோமே.

.தனது காதலைப் பற்றி வெளிப்படையாகக் பேசும் ஸ்ரீதேவி - Manithan

No comments:

Post a Comment