Tuesday 30 April 2013

மெல்லத்தமிழ் இனி சாகத்தான் வேண்டுமா?

மிக அருமையான குறும் படம்.  பார்த்த நேரத்தில் இருந்து மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.  காலப்போக்கில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் அழியத்தான் போகிறதா.   தமிழ் அழியப்போகிறது, அழியப்போகிறது என்று உயிரை விடுகின்ற நாங்கள் ஏன் இன்னும் புலம் பெயர் நாடுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தம் தான் எப்போதோ முடிந்துவிட்டதே.

உண்மையிலேயே நாங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதற்கு யுத்தம் மட்டும் காரணமில்லை.  இந்த நாடுகளின் அதீதமான பொருளாதார வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவவளர்ச்சி, வேலை வாய்ப்புக்கள் என்பனவும் தான் காரணம்.


தமிழர்களாகிய நாம் எம்மையும் இவ் வளர்ச்சிகளுக்கெல்லாம் உட்படுத்தும் போது எம்முடைய மொழி தானாகவே சரிசமமான வளர்ச்சியைக் காட்டும்.  புலம் பெயர் நாடுகளிலே நாம் எல்லொரும் அந்தந்த நாட்டு மொழிகளை எம்முடைய மூன்றாம் மொழியாகக் கற்றுக் கொள்கின்றோம். இதனால் அவர்களுடைய மொழி அதீத வளர்ச்சி அடைகின்றது.  மற்ற நாட்டுக்காரர் எம்முடைய மொழியைக் கற்க முனைகின்ற அளவிற்கு நாம் பொருளாதாரத்திலும் தொழில் துறையிலும் முன்னேற வேண்டும்.

எப்போதும் எம் மொழியின் பழம் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது.  நாம் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறுவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.  இந்த வளர்ச்சிகளிற்கூடாக எம் மொழியை அழிவில் இருந்து காப்போம்.

No comments:

Post a Comment