Monday 13 May 2013

எம் கலாச்சாரத்துக்கு ஒரு 'ஸ்கான் ரெஸ்ற்' தேவை


எனது நாற்ப்பதாவது பிறந்ததினத்தின் போது எனது மருத்துவக் காப்புறுத்தி நிறுவனத்திடமிருந்து வாழ்த்து அட்டை வந்திருந்தது.  கூடவே ஒரு கடிதமும் வந்திருந்தது.   எனக்கு நாற்ப்பது வயது ஆகிவிட்டதாம்; ஏதாவது நோய்நொடி பீடித்திருக்க வாய்ப்பு இருக்கிறதாம்; எனவே ஒரு முறை வந்து ஒரு முற்றுமுழுதான மருத்துவப் பரிசோதனைக்கு என்னை உட்படுத்த வேண்டுமாம்;  அந்த்தக் கடிததின் சாரம் இதுதான்.  சாதாரணமாக நான் நல்ல சுகதேகியான ஆள்.  அந்த ஆணவத்தில் கடிதத்தை தூக்கி மூலையில் போட முடியவில்லை.  வயது என்று ஒன்று ஆகிறதே.  வாலச் சுருட்டிக் கொண்டு போய் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு வந்தேன்.

இந்த நிகழ்ச்சி எனக்குள்ளே வேறு ஒரு சிந்தனையைத் தூண்டியது.  அதைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  நாம் எம் கலாச்சாரத்தில் நாம் நல்ல மதிப்பு வைத்திருக்கின்றோம். எம்முடையது மிகவும் பழைமையான கலாச்சாரம் என்று சொல்வதில் எமக்கு அலாதி பெருமை.  அதனால் தான் சொல்கின்றேன், எம் கலாச்சாரத்துக்கும் ஒரு முற்று முழுதான மருத்துவப் பரிசோதனை தேவை.

 எம் கலாச்சாரம் என்ற ஒரே காரணத்துக்காக கண்மூடித்தனமாக எல்லாமே சரியாகத்தான் இருக்கும் என்றுபிடிவாதமாக நம்புபவர்களும் எம்க்குள் இருக்கின்றோம். அதே போல மறுகோடிக்குச் சென்று எம் கலாசாரம் பட்டிக்காட்டுத்தனமானது என்று இதற்குள் இருக்கின்ற நல்ல விடயங்களை இழந்து விடுகின்றவர்களும் எமக்குள் இருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரையில் ஆளாளுக்கு சொந்தக்கருத்து சொல்கின்ற விடையமில்லை இது.  நானெல்லாம் யார்? வெறுமனே கேள்வி எழுப்பக் கூடிய ஒரு சாதாரண பழய ஆசிரியை, அம்மா, மனைவி, ஒரு சிறுவர் பராமரிப்பாளர்.  ஒரு விடையத்தைச் சரியென்று சொல்வதற்க்கோ, பிழையென்று சொல்வதற்க்கோ எனக்குள் இருக்கிற அறிவு போதாது.  போதவே போதாது.

தொழில்சார் வல்லுனர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உளவியல் அறிஞர்கள் எம் கலாச்சாரம் சார்ந்த பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறைகளை அலசி ஆராய வேண்டும்.  அது பற்றிப் பொது மக்களிடம் நிறையப் பேச வேண்டும்.  எடுக்கப் படுகின்ற திடமான முடிவுகள் சினிமாவாலும் நாவல்களாலும் சிறுகதைகளாலும் பேசப்படவேண்டும்.

ஒருகாலத்தில் இந்த அரவாணிகளைப் பாடாய்ப்படுத்தியவர்கள் நாங்கள்.  ஆனால் இப்போ நிலமை மிகவும் மாறிவிட்டது.  நாம் அவர்களைப் புரிந்து கொள்கின்றோம், மதிக்கின்றோம், அங்கீகரிக்கின்றோம்.  இதற்க்குக் காரணம் எமக்குள் ஏற்ப்பட்ட விஞ்ஞான மருத்துவ அறிவு வளர்ச்சிதானே.  சம காலத்திலேயே காஞ்சனா சினிமாப்படத்தைத் தந்து லாரன்ஸ் சமூகத்திற்க்கு அற்புத சேவையாற்றி இருக்கிறாரே.

இதே விதமாக எம் வாழ்க்கைமுறையின், நம்பிக்கைகளின், கலாச்சாரத்தின் ஒவ்வொரு கூறுகளும் புத்தி ஜீவுகளினால் அலசி ஆராயப்ப்ட வேண்டும்.


No comments:

Post a Comment