Tuesday 16 April 2013

ஒரு நாட்டின் கலாச்சாரமும் அடிப்படைத்தேவைகளும்


 எனக்கு மிகவும் பழக்கமான பெண்மணி அவர்.  ஐந்து பிள்ளைகளின் தாய்.  42 வயதாக இருக்கும் போது அவரது கணவர் இறந்து விட்டார்.  தாயகம் போலல்லாது உதவிக்கரம் நீட்ட அரசாங்க அமைப்புகள் ஆயிரம் உண்டு புலதிலே.  என்னதான் இருந்தாலும் வலி வலி தான்.  இழப்பு இழப்புத்தான்.  மிகவும் சிரமப்பட்டார் அந்தப் பெண்மணி.  உதவிக்கு வந்த அரசு அலுவலகத்தைச் சேர்ந்த பெண் அவரை மறுமணம் புரியும்படி அடிக்கடி ஆலோசனை கூறினார்.  கதை காற்றிலே பரவி வெளிவந்ந்தது.  ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கருத்துச் சொன்னார்கள்.  இதில் ஒருவர் சொன்ன கருத்து என்னை மிகவும் உலுக்கிப் போட்டது.  ”எங்கள் கலாச்சாரத்திலே கணவன் இறந்தால் மறுமணம் செய்வதில்லை என்று சொல்ல வேண்டியதுதானே.”  என்றவாறு அவர் தனது கருத்தைக் கூறியிருந்தார்.  இதில் எனக்கு உறுத்தலாக இருந்தது அவர் பாவித்த கலாச்சாரம் என்ற வார்த்தை தான்.

கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு, அரவணைப்பு, பொருளாதாரம் என்று ஆயிரம் தேவைகள் தொக்கி நிற்கும்.  இந்த்தத் தேவைகள் எல்லாம் தேவைகளாகவே இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லையே.  தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட வேண்டியவையே.  இன்னுமொரு ஆண்துணை அவரது தேவைகளை பூர்த்தி செய்யுமாயின் அவர் அதைத் தேடிக் கொள்வதில் என்ன தவறு.  இப்போ என் விவாதம் அது இல்லை.

கலாச்சாரம் என்பது தனிமனித, சமூகத் தேவைகளை சுதந்திரமாகப் பூர்த்தி செய்ய இடம் அளிப்பதாக இருக்கவேண்டும்.  அதை விடுத்து தனி மனித அடிப்படைத்தேவைகளை உதாசீனம் செய்வதாகவோ அல்லது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள் விதிப்பதாகவோ இருக்கக் கூடாது.

ஒரு இனத்தின் கலாச்சாரம் எப்போதுமே ஆரோக்கியமானதாகவே இருக்கும்.    நாம் தான் அதை எம் இஸ்ரத்துக்குத் தப்புத்தப்பாகப் புரிந்து வைத்து இருக்கின்றோமோ என்னவோ.

No comments:

Post a Comment